செய்திகள்
கைது

கும்மிடிப்பூண்டி அருகே மனைவியை கொன்ற கணவர் கைது

Published On 2020-02-27 07:16 GMT   |   Update On 2020-02-27 07:16 GMT
கும்மிடிப்பூண்டி அருகே குடும்ப தகராறில் மனைவியை கொன்று நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்துக்கோட்டை:

கும்மிடிப்பூண்டியை அடுத்த கண்ணன் கோட்டையை சேர்ந்தவர் வாசு. வேன் டிரைவர். இவரது மனைவி ஆர்த்தி (25). இருவரும் கடந்த 2 வருடத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் வாசு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனை மனைவி ஆர்த்தி கண்டித்து வந்தார்.

இதுதொடர்பாக கடந்த ஜனவரி 11-ந்தேதி இரவும் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த வாசு, மனைவி ஆர்த்தியை தாக்கினார். இதில் அவர் மயங்கி விழுந்தார்.

இதனால் பயந்து போன வாசு தனது மனைவி திடீரென மயக்கம் அடைந்ததாக அக்கம் பக்கத்தினரிடம் கூறி சத்தியவேடில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஆர்த்தி பரிதாபமாக இறந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் ஆர்த்தி கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. போலீசார் தேடுவதை அறிந்ததும் வாசு தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வாசுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மனைவியை கணவரே கொன்று நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News