செய்திகள்
கோப்புப்படம்

டெல்லியில் நடந்த தாக்குதலை கண்டித்து புதுவையில் ஜனநாயக அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-02-27 05:20 GMT   |   Update On 2020-02-27 05:20 GMT
டெல்லியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து புதுவையில் ஜனநாயக அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:

மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக போராடிய மக்கள் மீது டெல்லியில் நடந்த தாக்குதலை கண்டித்தும், இதை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் புதுவை மறைமலை அடிகள் சாலையில் சுதேசி மில் அருகே அனைத்து ஜனநாயக அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சோசலிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம் மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன், தமிழர் களம் தலைவர் அழகர் உள்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News