செய்திகள்
வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 29-ந்தேதி நடக்கிறது

Published On 2020-02-26 10:20 GMT   |   Update On 2020-02-26 10:20 GMT
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக வருகிற 29-ந்தேதி பொறியியல் பட்டப்படிப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக வருகிற 29-ந்தேதி பொறியியல் பட்டப்படிப்பு (பி.இ) கல்வித்தகுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது ஒரு இலவசப்பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

அரசுத் துறைகளுக்கு அவர்களது பதிவு மூப்பின்படி அரசு பணிக்கு பரிந்துரைக்கப்படும். எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் தனியார் துறையில் வேலைக்கு சென்றால் தங்களது பதிவு ரத்து செய்யப்பட்டு விடுமோ என்று அச்சப்பட வேண்டியதில்லை.

முகாம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக பின்புறமுள்ள திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை முதல் மாலை வரை நடைபெறும்.

பொறியியல் பட்டப்படிப்பு(பிஇ) தேர்ச்சி பெற்று தனியார் நிறுவனங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.
Tags:    

Similar News