செய்திகள்
தற்கொலை

மகன்கள் பராமரிக்காததால் விரக்தி- மூதாட்டி தற்கொலை

Published On 2020-02-26 10:17 GMT   |   Update On 2020-02-26 10:17 GMT
உடன்குடி அருகே மகன்கள் பராமரிக்காத விரக்தியில் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள மாதவன்குறிச்சியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சுயம்பு அம்மாள் (வயது 80). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகம் இறந்துவிட்டார். இவர்களுக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இதில் கடைசி மகனை தவிர அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் சுயம்பு அம்மாள் மட்டும் தனியாக சமைத்து சாப்பிட்டு வந்தார். இவருடைய மகன்கள் கவனிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த குலசேகரன்பட்டிணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுயம்பு அம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News