செய்திகள்
மருந்து கம்பெனி தீப்பிடித்து எரிந்த காட்சி.

திருவள்ளூர் அருகே மருந்து தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து

Published On 2020-02-26 06:23 GMT   |   Update On 2020-02-26 06:23 GMT
திருவள்ளூர் அருகே மருந்து தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டையில் மருந்து- மாத்திரைகளுக்கான மூலப் பொருட்களை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது.

நேற்று மாலை 6 மணி அளவில் இந்த கம்பெனியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நீண்ட நேரத்துக்குப் பிறகு தீ முழுவதும் அணைக்கப்பட்டது.

அசம்பாவிதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர், காக்களூர், பெரியகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான மூலப் பொருட்கள் எரிந்து நாசமானதாக தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News