செய்திகள்
தலைமைச் செயலகம்

மானியக் கோரிக்கைகள் மீது விவாதம்... தமிழக சட்டசபை மார்ச் 9-ல் கூடுகிறது

Published On 2020-02-26 05:27 GMT   |   Update On 2020-02-26 05:27 GMT
துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவதற்காக தமிழக சட்டசபை மார்ச் 9-ம் தேதி மீண்டும் கூடுகிறது.
சென்னை:

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. அப்போது துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை என 20-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெற்றது. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவதற்காக, மார்ச் 9-ம் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ளார். 
Tags:    

Similar News