செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

புதுவை சின்ன வாய்க்கால் வீதியில் வீட்டில் புகுந்து குளிர்சாதன பெட்டி, கட்டுமான பொருட்கள் திருட்டு

Published On 2020-02-25 11:31 GMT   |   Update On 2020-02-25 11:31 GMT
புதுவை சின்னவாய்க்கால் வீதியில் வீட்டில் புகுந்து குளிர்சாதன பெட்டி மற்றும் வீட்டு கட்டுமானபொருட்களை மர்ம நபர்கள் திருடிசென்று விட்டனர்.

புதுச்சேரி:

புதுவை சின்னவாய்க்கால் வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது56). சமூக சேவகரான இவர் தனது வீட்டை புதுப்பிக்க முடிவு செய்தார். அதற்கான வேலைகள் நடந்து வருவதால் ஆரோக்கியசாமி கடந்த சில நாட்களாக குடும்பத்துடன் டி.வி.நகரில் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை கட்டுமான பணிக்காக ஆட்கள் வந்திருக்கிறார்களா என பார்வையிட ஆரோக்கிய சாமி சின்னவாய்க்கால் வீதியில் உள்ள வீட்டுக்கு சென்றார். அப்போது பூட்டி இருந்த கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு கழற்றி வைத்திருந்த குளிர்சாதனை பெட்டி (ஏ.சி.) மற்றும் கட்டுமான பணிக்காக வைத்திருந்த வெல்டிங் மெஷின், டிரிலிங்மெஷின், கட்டிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை காணாமல் திடுக்கிட்டார்.

யாரோ மர்ம நபர்கள் இரவில் கதவை உடைத்து இதனை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 1 லட்சமாகும்.

இதுகுறித்து ஆரோக்கியசாமி ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து குளிர்சாதன பெட்டி மற்றும் கட்டுமான பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை பிடிக்க அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி. கேமரா உதவியோடு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Tags:    

Similar News