செய்திகள்
செய்யாறு அருகே நாடகம் பார்க்க சென்ற விவசாயி மரணம்
செய்யாறு அருகே நாடகம் பார்க்க சென்ற விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு:
காஞ்சிபுரம் அருகே உள்ள பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (37) விவசாயி. மயான கொள்ளை திருவிழாவையொட்டி வெம்பாக்கம் அருகேயுள்ள செய்யனூரில் நேற்றிரவு நாடகம் நடந்தது. இதனை பார்க்க சென்ற ஜெய்சங்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பார்த்த போது ஜெய்சங்கர் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், ஜெய்சங்கர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் அருகே உள்ள பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (37) விவசாயி. மயான கொள்ளை திருவிழாவையொட்டி வெம்பாக்கம் அருகேயுள்ள செய்யனூரில் நேற்றிரவு நாடகம் நடந்தது. இதனை பார்க்க சென்ற ஜெய்சங்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பார்த்த போது ஜெய்சங்கர் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், ஜெய்சங்கர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.