செய்திகள்
புகார்

வாலிபர் மீது தாக்குதல்: புகார் வாங்க மறுத்த பெண் ஏட்டு மீது எஸ்.பி.யிடம் புகார்

Published On 2020-02-25 10:01 GMT   |   Update On 2020-02-25 10:01 GMT
பெண் ஏட்டு மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ்.பி.யிடம் வாலிபர் புகார் கொடுத்துள்ள சம்பவம் ஒரத்தநாடு போலீசார் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமம், கீழக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது 51) இவர் போலீஸ் உளவாளியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இவருக்கும், இவரது தாய் மாமன் ஒருவருக்குமிடையே கொடுக்கல்- வாங்கல் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த பத்து தினங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தையும் நடந்தது. சம்பவத்தன்று அறிவழகன் அவரது ஊர் பஸ் நிறுத்தம் நிழற்குடையில் உட்கார்ந்திருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த பிரகதீஷ் (28) என்பவர் அறிவழகனிடம் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அறிவழகன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

அப்போது அங்கு பணியிலிருந்த பெண் ஏட்டு ரஜினி என்பவர் அவரது புகாரை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிவழகன் தன்னைத்தாக்கிய பிரகதீஷ் என்பவர் பெண் ஏட்டு ரஜினியின் உறவினர் என்பதால் தனது புகாரை வாங்க மறுத்ததாகவும், இதனால் தான் அதிகம் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், ஏட்டு ரஜினி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட எஸ்.பி. மகேஷ்வரனிடம் புகார் கொடுத்தார்.

Tags:    

Similar News