செய்திகள்
தற்கொலை

பவானி ஆற்றில் குதித்து முதியவர் தற்கொலை

Published On 2020-02-25 09:47 GMT   |   Update On 2020-02-25 09:47 GMT
பவானி ஆற்றில் குதித்து முதியவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள நெல்லித்துறை வேல் நகரை சேர்ந்தவர் நடராஜன் (68). இவர் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே விருந்தினர் மண்டபம் வைத்து நடத்தி வந்தார்.

இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி பகல் நடராஜன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி இந்திராணியிடம் கருவாடு வறுத்து தனக்கு தருமாறு கேட்டுள்ளார்.

அப்போது இந்திராணி இந்த வயதில் இப்படி குடித்துவிட்டு வருகிறீர்களே என்று கேட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நடராஜன் தனது மனைவி இந்திராணியிடம் தகராறு செய்துவிட்டு வீட்டை விட்டு சென்றுவிட்டார் . பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அக்கம்பக்கம் விசாரித்தும் எங்கு தேடியும் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று நெல்லித்துறை பவானி ஆற்று பாலத்திற்கு அடியில் ஆற்றில் நடராஜன் பிணமாக மிதப்பது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில் அவர் பவானி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேட்டுப்பாளையம் போலீசார் நடராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News