செய்திகள்
தற்கொலை

மேட்டுப்பாளையத்தில் காதலி பேச மறுத்ததால் வாலிபர் தற்கொலை

Published On 2020-02-25 09:44 GMT   |   Update On 2020-02-25 09:44 GMT
மேட்டுப்பாளையத்தில் காதலி பேச மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் எம் .எஸ். ஆர். புரத்தைச் சேர்ந்தவர் காண்டீபன்(26). காய்கறி மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்த அவர் தனது அண்ணன் கவுதம் பராமரிப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் காண்டீபன் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலித்த பெண் அவருடன் பேசாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த காண்டீபன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று காண்டீபன் தனது பெரியம்மா வீட்டிற்கு தூங்க செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். மறுநாள் காலை பெரியம்மாவின் மகன் கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டு படுக்கையறையில் விட்டத்தில் சேலையில் தூக்குப்போட்டு காண்டீபன் தொங்கிக் கொண்டிருந்தார். உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News