செய்திகள்
கைது

வல்லத்தில் தம்பி மனைவியை தாக்கிய பெயிண்டர் கைது

Published On 2020-02-25 09:42 GMT   |   Update On 2020-02-25 09:42 GMT
வல்லத்தில் தம்பி மனைவியை தாக்கிய பெயிண்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வல்லம்:

தஞ்சையை அடுத்த வல்லம் பெரியார் நகரை சேர்ந்த பாக்யராஜ் என்பவரின் மனைவி ஞானம்(வயது 39). பாக்யராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ஞானத்திற்கும் அவருடைய கணவர் பாக்யராஜின் அண்ணன் பீட்டர் என்பவருக்கும் இடையே இடம் சம்மந்தமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று ஞானம் வீட்டிற்கு சென்ற பீட்டர், அவருடைய மனைவி ரெஜினா, உறவுக்கார பெண் ஸ்டெல்லா ஆகியோர் ஞானத்திடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த மூவரும் ஞானத்தை கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் கை மற்றும் தலையில் காயமடைந்த ஞானத்தை அக்கம் பகாகத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர்.

இது குறித்து ஞானம் கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் பீட்டர் (45) அவருடைய மனைவி ரெஜினா, உறவுக்கார பெண் ஸ்டெல்லா ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பீட்டரை நேற்று போலீசார் கைது செய்தனர். ரெஜினா, ஸ்டெல்லா ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News