செய்திகள்
தற்கொலை

திருக்கனூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-02-25 09:30 GMT   |   Update On 2020-02-25 09:30 GMT
திருக்கனூர் அருகே நோய் கொடுமை காரணமாக வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கனூர்:

திருக்கனூர் அருகே சோரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கலைச்செல்வன் (வயது28), விவசாய கூலிவேலை செய்து வந்தார். கலைச்செல்வனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் இவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதற்காக அவர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை கலைச்செல்வன் நோய் கொடுமையால் துடித்தார். அவரை சிகிச்சைக்காக அழைத்து செல்வதாக கூறி அவரது தங்கை தீபா குளிக்க சென்றார். பின்னர் குளித்து விட்டு வந்து பார்த்த போது கலைச்செல்வன் சேலையால் தூக்குப்போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கலைச்செல்வனை தூக்கில் இருந்து மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கலைச்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News