செய்திகள்
வெடிவிபத்தில் தரைமட்டமான அறை

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயம் அடைந்த மேலும் 3 பேர் உயிரிழப்பு

Published On 2020-02-25 03:33 GMT   |   Update On 2020-02-25 03:33 GMT
சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் நேற்று அடுத்தடுத்து இறந்தனர். இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது.
சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு கடந்த 19-ந் தேதி சீனி பட்டாசு தயாரிக்கும் பகுதியில் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் சல்பர் மற்றும் அமோனியம் சேமித்து வைத்திருந்த குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது. அதில் அந்த அறை தரைமட்டமானது.

இந்த வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்கள். 6 பேர் பலத்த தீக்காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று 3 பேர் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை தரப்படுகிறது.

காயம் அடைந்த 3 பேர் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. அவர்களது உடல்களை பார்த்து உறவினர்கள் கதறியது பரிதாபத்தை ஏற்படுத்தியது. பின்னர் அவர்களது உடல்கள் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News