செய்திகள்
ரத்தினகிரி அருகே தடுப்பு கம்பி மீது கார் மோதியது - டிரைவர் படுகாயம்
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே தடுப்பு கம்பி மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் படுகாயமடைந்தார்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரியை அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 40). இவர் நேற்று காலை பூட்டுத்தாக்கில் இருந்து, ஆற்காடு நோக்கி காரை ஓட்டி வந்தார்.
ரத்தினகிரி தனியார் பள்ளி அருகே வந்தபோது தாமோதரன் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு கம்பி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தாமோதரன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில் ரத்தினகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.