செய்திகள்
கைது

சாமல்பட்டியில் பேக்கரி கடை உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது

Published On 2020-02-24 15:04 GMT   |   Update On 2020-02-24 15:04 GMT
சாமல்பட்டியில் மது குடிக்க பணம் தராததால் பேக்கரி கடை உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்துள்ள சாமல்பட்டியை சேர்ந்தவர் மாசிலாமணி. இவரது மகன் சுரேஷ். இவர் சாமல்பட்டி பஸ் நிலையம் அருகே பேக்கரி கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று சாமல்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் மகன் செந்தில்குமார் (35), கண்ணன் மகன் சுதாகர் ஆகிய 2 பேரும் பேக்கரிக்கு வந்தனர். அப்போது  அங்கு சுரேஷிடம் மது குடிக்க பணம் கேட்டு இவர்கள் 2 பேரும் தொந்தரவு செய்தனர். 

இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் இவர்கள் 2 பேர் சேர்ந்து சுரேஷை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த சுரேஷை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

இது குறித்து சுரேஷ் சாமல்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் பேக்கரி கடையின் உரிமையாளரை தாக்கிய செந்தில்குமார், சுதாகர் ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News