செய்திகள்
மின்நிறுத்தம்

போச்சம்பள்ளி-ஊத்தங்கரை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

Published On 2020-02-24 13:28 GMT   |   Update On 2020-02-24 13:28 GMT
போச்சம்பள்ளி மற்றும் ஊத்தங்கரை பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
போச்சம்பள்ளி:

போச்சம்பள்ளி மின்செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கோட்டத்திற்கு உட்பட்ட போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க் கிழமை) மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி போச்சம்பள்ளி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிகல், கரடியூர், புலியூர் பாராண்டபள்ளி, கோட்டைப்பட்டி, பண்ணந்தூர், வடமங்கலம்  மற்றும் அதன் சுற்றுப் பகுதியிலும், மத்தூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட மத்தூர், சிவம்பட்டி, அந்தேரிபட்டி, களர்பதி, குள்ளம்பட்டி, வலசைகவுண்டனூர், புளியம்பட்டி, ஆப்பள்ளி, கண்ணன்ட அள்ளி, அத்திக்கானூர், பெருகோபனபள்ளி மற்றும் ஊத்தங்கரை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட ஊத்தங்கரை, கொண்டாம்பட்டி, சென்னப்பநாய்க்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, உப்பாரப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News