செய்திகள்
தற்கொலை

கும்பகோணம் அருகே குடும்ப வறுமையால் இளம்பெண் தற்கொலை

Published On 2020-02-24 09:22 GMT   |   Update On 2020-02-24 09:22 GMT
கும்பகோணம் அருகே குடும்ப வறுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் பந்தி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். கூலி தொழிலாளி. இவரது மகள் ஜெனிபர் (வயது 21).

இந்த நிலையில் ஜெனிபருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதனை அறிந்த ஜெனிபர் ஏற்கனவே நம்மை கஷ்டபட்டு பெற்றோர் வளர்த்து வருகின்றனர். திருமணத்துக்கும் கடன் வாங்கி தான் நடத்துவார்கள். குடும்ப வறுமை சூழ்நிலையில் கடன் வாங்கினால் அதனை தனது தந்தையால் கட்டவே முடியாது என ஜெனிபர் வேதனை அடைந்தார்.

இதனால் யாருக்கும் கஷ்டம் கொடுக்க கூடாது என்று எண்ணிய ஜெனிபர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குமாட்டி கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெனிபர் இறந்தார்.

இது குறித்து நாச்சியார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News