புளியங்குடியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
புளியங்குடி:
புளியங்குடி அண்ணா தெருவை சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவருக்கு அழகம்மாள்(வயது 45) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். அழகம்மாள் கண்பார்வை இல்லாதவர். இதனால் அவர் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்தார். மேலும் அவர் அடிக்கடி வீட்டில் உள்ளவர்களிடம் கண்பார்வை இல்லாமல் வாழ்வதைவிட இறந்து போவதே மேல் என்று கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் வீட்டிற்கு வந்த முருகன், தனது மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.