செய்திகள்
ஊத்துக்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை
ஊத்துக்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள சின்ன வண்ணாங் குப்பம் மண்ணடி தெருவை சேர்ந்தவர் வேலு (35) கூலி தொழிலாளி. இவர் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.