செய்திகள்
தற்கொலை

தர்மபுரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-02-23 17:54 GMT   |   Update On 2020-02-23 17:54 GMT
தர்மபுரி அருகே ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:

தர்மபுரி நாட்டாண்மைபுரத்தை சேர்ந்தவர் நாட்டான் மாது. தி.மு.க. முன்னாள் கவுன்சிலர். இவருடைய மகன் மலர்மன்னன் (வயது 27). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அண்மையில் இவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டில் உள்ள ஒரு அறையில் நேற்று மலர்மன்னன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News