செய்திகள்
பெண்ணிடம் நகை பறிப்பு

பெரம்பலூர் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2020-02-23 17:12 GMT   |   Update On 2020-02-23 17:12 GMT
பெரம்பலூர் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகையை வாலிபர்கள் பறித்து சென்றனர்.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் பகுதியை அடுத்த நாட்டார்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்பிரசாத் (வயது54). இவர் செட்டிகுளம் பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (52). நேற்று மதியம் இவர் அவரது கணவருக்கு சாப்பாடு கொடுப்பதற்காக மொபட்டில் சென்றார்.

நாட்டார்மங்கலம் மலையடிவாரம் வெங்காய குடோன் பகுதியில் செல்லும் போது திடீரென ஹெல்மட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். 

இது குறித்து ராம்பிரசாத் பாடாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து  கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News