செய்திகள்
கைது

கும்மிடிப்பூண்டியில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது

Published On 2020-02-23 09:04 GMT   |   Update On 2020-02-23 09:04 GMT
கும்மிடிப்பூண்டியில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேசுக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் குமணன் மற்றும் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் ரெயில்வே மேம்பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

அவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் அஜய்குமார் (30) என்பதும், அவரிடம் 150 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து அஜய் குமாரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசாரின் கெடுபிடியால் சிப்காட் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொடுத்து நடமாடும் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாக அஜய்குமார் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News