செய்திகள்
கோப்பு படம்

முன்விரோதத்தில் விவசாயி மீது இரும்பு கம்பியால் தாக்குதல் - 3 பேர் கைது

Published On 2020-02-22 16:52 GMT   |   Update On 2020-02-22 16:52 GMT
நீடாமங்கலம் அருகே முன்விரோதத்தில் விவசாயி மீது இரும்பி கம்பியால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகே உள்ள பன்னிமங்கலம் கிராமம் காலனித்தெருவை சேர்ந்தவர் சுரே‌‌ஷ் (வயது 34). பன்னிமங்கலம் கொண்டியாத்தாங்கரை தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (27), பன்னிமங்கலம் மணல்மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி (38), பன்னிமங்கலம் கொண்டியாத்தாங்கரைத்தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (29). இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சுரேசுக்கும், விஜயகுமார், பக்கிரிசாமி, செல்வகுமார் ஆகிய 3 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து சுரேசை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சுரேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமார், பக்கிரிசாமி, செல்வகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 
Tags:    

Similar News