செய்திகள்
நகை பறிப்பு

செய்யாறு கோவிலில் சிவராத்திரி விழாவில் 2 பெண்களிடம் நகை பறிப்பு

Published On 2020-02-22 12:14 GMT   |   Update On 2020-02-22 12:14 GMT
செய்யாறு கோவிலில் மகா சிவராத்திரி விழாவில் 2 பெண்களிடம் செயின் பறித்து சென்றுவிட்டனர்

செய்யாறு:

செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவிலில் நேற்று சிவராத்திரி விழா மற்றும் பிரதோ‌ஷ வழிபாடு நடந்தது. நிகழ்ச்சியில் செய்யாறு டவுன் திருவோத்தூர் சன்னதி தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மனைவி ஜானகி (வயது 63). பங்கேற்க சென்றார்.

சிவராத்திரி என்பதால் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில் பக்தர்கள் போர்வையில் உள்ளே வந்த மர்மநபர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜானகி அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு நழுவி விட்டார். இதனை ஜானகி அப்போது உணரவில்லை. இந்த நிலையில் அவர் வீடு திரும்பியபோது தான் நகையை மர்மநபர் பறித்தது அவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து அவர் செய்யாறு போலீசில் புகார் செய்தார்.

இதேபோல் மற்றொரு பெண்ணிடமும் நகை பறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்யாறு போலீசார் விரைந்து சென்று கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News