செய்திகள்
தற்கொலை

மேட்டுப்பாளையத்தில் கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2020-02-22 11:36 GMT   |   Update On 2020-02-22 11:36 GMT
மேட்டுப்பாளையத்தில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா இவரது மகள் கவினித்தா (21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடைய வில்லை.

இதனால் மனவேதனை அடைந்த கவினித்தா சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் எலி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனைமலையை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (40). தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று கிருஷ்ணராஜ் காந்திபுரத்தில் உள்ள கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.

அப்போது அங்கு அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News