செய்திகள்
தற்கொலை

மதுரை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2020-02-22 10:23 GMT   |   Update On 2020-02-22 10:23 GMT
மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

மதுரை:

மதுரை சதாசிவம் நகர் திலகர் திடலைச் சேர்ந்தவர் சகாயராணி (வயது 51). கடந்த சில மாதங்களாக கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் விரக்தியில் இருந்த இவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்தார்.

படுகாயமடைந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சகாயராணி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை சோலையழகு புரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பாலுச்சாமி (வயது 47). அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடன் பிரச்சினையால் பெட்டிக்கடையை விற்றதாக தெரிகிறது. இதனை குடும்பத்தினர் கண்டித்தனர். இதில் விரக்தியடைந்த பாலுச்சாமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை புட்டுத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரபாண்டியன் (வயது 50). கடன் பிரச்சினையால் விரக்தியடைந்த இவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

Similar News