செய்திகள்
கைது

கெலமங்கலம் அருகே கஞ்சா கடத்திய 2 பேர் கைது

Published On 2020-02-21 18:17 GMT   |   Update On 2020-02-21 18:17 GMT
கெலமங்கலம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா கடத்திய 2 பேரை கைது செய்தனர்.
ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது பைரமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கஞ்சா வைத்திருந்ததும், பெங்களூரை அடுத்துள்ள அனந்தபுரத்தை சேர்ந்த அமரன் (வயது21), அக்ரஹாரம் மகடியை சேர்ந்த கேசவமூர்த்தி (20)  ஆகியோர் என்பதும் தெரியவந்தது. 

உடனே அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.       
Tags:    

Similar News