செங்கம் அருகே கண்டெய்னர் லாரி மீது பைக் மோதி 2 பேர் பலி
செங்கம்:
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் அடுத்த அடிவாரம் கிராமத்தை சேர்ந்தவர் மணி விவசாயி இவரது மகன் விஜய் (வயது 19) கடலாடி பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் தமிழ்ச்செல்வன் (19) இருவரும் நண்பர்கள். இருவரும் இன்று காலை பைக்கில் வளையாம்பட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
செங்கம் அடுத்த குயிலம் கூட்ரோடு அருகே சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரிடிரைவர் திடீரென பிரேக் போட்டார். அப்போது பின்னால் சென்ற பைக் லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் பைக்கில் வந்த விஜய், தமிழ்செல்வன் தூக்கி வீசப்பட்டனர். இருவரும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த புதுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.