செய்திகள்
தற்கொலை

பல்லடத்தில் பள்ளி ஆசிரியர் தற்கொலை

Published On 2020-02-20 17:08 GMT   |   Update On 2020-02-20 17:08 GMT
பல்லடத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனியாக வசித்து வந்த பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம்- செட்டிபாளையம் ரோடு அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் பாலாஜி(33). இவரது மனைவி சரண்யா(30).

பாலாஜி கோவை சரவணம் பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் குடிபழக்கத்துக்கு அடிமையான பாலாஜி தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இதனால் சரண்யா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து பாலாஜி தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் பாலாஜி தங்கி இருக்கும் வீட்டின் உரிமையாளர் பெஞ்சமின் வாடகை வாங்குவதற்காக அவரது வீட்டிற்கு சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் பாலாஜி வெளியில் வரவில்லை.

மேலும் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பெஞ்சமின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள அறையில் பாலாஜி அழுகிய நிலையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News