செய்திகள்
திருபுவனை அருகே கடைக்கு சென்ற இளம்பெண் மாயம்
திருபுவனை அருகே கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற இளம்பெண் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே ஆண்டியார்பாளையம் கணபதி நகரை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் நித்யா (வயது 21). இவர் பள்ளி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று நித்யா கடைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார்.
ஆனால், அதன்பிறகு நித்யா வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் நித்யா இல்லை.
இதையடுத்து அவரது சகோதரர் சிவக்குமாரும் திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான நித்யாவை தேடி வருகிறார்கள்.