சோழவரத்தில் 3 பேர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்: போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
செங்குன்றம்:
சோழவரத்தை அடுத்த பெரிய முல்லைவாயில் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மதனகோபால். விவசாயி.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சேகர், குணசீலன், அஜித், விஷ்ணு,, ஐயப்பன், ஆகியோருக்கும் சாலை போடும் தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் மதனகோபாலயும் அவரது தந்தை ஏழுமலை தாயார் மல்லிகா ஆகியோர் உருட்டுக்கட்டை இரும்புகம்பி ஆகியவற்றால் தாக்கப்பட்டனர். இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் தங்களை தாக்கிய சேகர், குணசீலன், அஜித், விஷ்ணு, ஐயப்பன் உள்ளிட்ட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மதனகோபால் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனிடம் புகார் அளித்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.