செய்திகள்
மகேந்திரமங்கலம் அருகே டிராக்டர் ஸ்டீயரிங் அழுத்தியதில் டிரைவர் பலி
மகேந்திரமங்கலம் அருகே டிராக்டர் ஸ்டீயரிங் நெஞ்சில் மோதி டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் விக்னேஷ் (வயது 21) டிராக்டர் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் விக்னேஷ் சூடப்பட்டி காட்டுப்பகுதியில் டிராக்டரில் ஜல்லி, கற்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப்பகுதியில் மேடு, பள்ளமாக இருந்ததால் டிராக்டரின் முன்பகுதி குதித்தது. இதனால் டிராக்டரின் ஸ்டியரிங் விக்னேஷின் நெஞ்சில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.