செய்திகள்
பிடிபட்ட மலைப்பாம்பு.

திருப்பத்தூர் அருகே 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது

Published On 2020-02-19 14:42 GMT   |   Update On 2020-02-19 14:42 GMT
திருப்பத்தூர் அருகே 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று பிடிபட்டது. அந்த பாம்பை ஜவ்வாதுமலை காப்புக்காடு பகுதியில் விட்டனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூரில் உள்ள திருநீலகண்டர் தெருவை சேர்ந்தவர் பூபதி (வயது 42). இவருக்கு சொந்தமான நிலம் திருப்பத்தூர் அருகே ராஜாபாளையத்தில் உள்ளது. நிலத்தில் பருத்தி பயிரிட்டுள்ளார். நேற்று பருத்தி பயிருக்கு இடையே சுமார் 8 அடி நீளமுள்ள மலைபாம்பு ஒன்று சுற்றித் திரிந்தது.

அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். ஊர் இளைஞர்கள் ஒன்று திரண்டு அந்த மலைப்பாம்பை பிடித்து, திருப்பத்தூர் வனக்காப்பாளர் ரவியிடம் ஒப்படைத்தனர். பின்னர் ஜவ்வாதுமலை காப்புக்காடு பகுதியில் மலைப்பாம்பு விடப்பட்டது.
Tags:    

Similar News