செய்திகள்
திருச்சி மத்திய பஸ் நிலையம்

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கழிவறைக்கு சென்ற இளம்பெண் மாயம்

Published On 2020-02-19 14:10 GMT   |   Update On 2020-02-19 14:10 GMT
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கழிவறைக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அவர் கடத்தப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி:

நாகை மாவட்டம் மயிலாடு துறை தாலுகா திருமங்கலம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் வரதராஜன் மகள் கனிமொழி (வயது 17). இவர் கடந்த 15-ந்தேதி இரவு தனது உறவினரான மோகனசுந்தர் என்பவருடன் சொந்த ஊருக்கு செல்வதற்காக கோவையில் இருந்து திருச்சி வந்தார். மத்திய பஸ் நிலையத்தில் இறங்கிய அவர் கழிவறைக்கு செல்வதாக உறவினரிடம் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. நீண்ட நேரமாக வராததால் உறவினர் மோகனசுந்தர் தேடிப் பார்த்தும் தகவல் எதுவும் இல்லை. 

இதையடுத்து அவர் கனிமொழியின் தந்தை வரதராஜனுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் விரைந்து வந்த வரதராஜன் உறவினர்களுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று தேடிப்பார்த்தார். ஆனாலும் கனிமொழி குறித்த எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

பின்னர் அவர் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கனிமொழியை தேடி வருகிறார்கள்.

மஞ்சள் நிற சுடிதார், பச்சை நிற பேண்ட் அணிந்திருந்த கனிமொழி தானாகவே எங்கேனும் சென்றாரா? அல்லது யாராவது மர்ம நபர்களால் கடத்தப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் கண்டோன் மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டரை 94981 56477, சப்-இன்ஸ்பெக்டரை 94981 57257, போலீஸ் நிலையத்தை 0431 2460692 என்ற எண்ணிலும் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News