செய்திகள்
பெரம்பலூர் அருகே வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி
பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஆய்க்குடி கிராமத்தை சேர்ந் தவர் இளவரசன் (வயது 25), கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (24). இவர்கள் இருவரும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
துறைமங்கலம் ஏரிக்கரை பகுதியில் செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார், நெடுஞ்சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த வாலிபர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி, மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.