செய்திகள்
கைது

குன்னத்தூர் அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி கைது

Published On 2020-02-19 12:08 GMT   |   Update On 2020-02-19 12:08 GMT
குன்னத்தூர் அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கோவை:

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரது தந்தைக்கு கண் தெரியாது. தாய் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் இவரது வீட்டின் அருகே தறிக்குடோனில் வேலை பார்த்து வந்த அப்பாஸ் அலி (35) என்பவர் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.

சம்பவத்தன்று சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து சிறுமியை அவரது தாய் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். டாக்டர்கள் பரிசோதனை செய்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதில் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் சிறுமியிடம் கேட்டபோது அப்பாஸ் அலிதான் தன்னை கர்ப்பமாக்கியதாக கூறினார்.

பின்னர் சிறுமியின் தாய் இது குறித்து அவினாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அப்பாஸ் அலியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல் கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரது தாய் இறந்து விட்டார். இந்தநிலையில் சிறுமி அவரது சித்தியின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.

இந்த சிறுமி திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி இருந்து 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி கடந்த சில மாதங்களாக காது வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக சிறுமி ஆனைமலையில் உள்ள தனது சித்தி வீட்டுக்கு வந்து இருந்தார்.

சம்பவத்தன்று சிறுமி வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது சிறுமியின் சித்தியின் கணவர் காளிதாஸ் ( வயது 49) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் காளிதாஸ் அங்கு இருந்து தப்பிச் சென்றார். வெளியே சென்ற சித்தி வந்த பின்னர் சிறுமி நடந்த சம்பவங்களை கூறினார்.

பின்னர் இது குறித்து சிறுமியின் சித்தி பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காளிதாசை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News