செய்திகள்
பெண் பலி

மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

Published On 2020-02-19 10:09 GMT   |   Update On 2020-02-19 10:09 GMT
பொன்னேரி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:

பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் இந்துமதி (36). இவர் கடந்த 2-ம் தேதி வீட்டு முதல் மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இந்த சம்பவம் குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News