செய்திகள்
மாணவிகள்

பொதுத்தேர்வை 26 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்

Published On 2020-02-19 03:36 GMT   |   Update On 2020-02-19 03:36 GMT
எஸ்.எஸ்.எல்.சி.யில் தேர்வை 9 லட்சத்து 44 ஆயிரத்து 569 பேரும், பிளஸ்-1 வகுப்பில் 8 லட்சத்து 26 ஆயிரத்து 82 பேரும், பிளஸ்-2 வகுப்பில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 358 பேரும் பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.
சென்னை:

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கு அடுத்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ந் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான பணிகளை தேர்வுத்துறை செய்து வருகிறது.

எஸ்.எஸ்.எல்.சி.யில் தேர்வை 9 லட்சத்து 44 ஆயிரத்து 569 பேரும், பிளஸ்-1 வகுப்பில் 8 லட்சத்து 26 ஆயிரத்து 82 பேரும், பிளஸ்-2 வகுப்பில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 358 பேரும் பொதுத்தேர்வை எழுத உள்ளனர். இந்த 3 வகுப்புகளிலும் சேர்த்து மொத்தம் 25 லட்சத்து 87 ஆயிரத்து 9 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பான விரிவான அறிக்கையை தேர்வுத்துறை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News