செய்திகள்
கைது

தர்மபுரியில் மதுவிற்ற 2 பேர் கைது

Published On 2020-02-18 17:24 GMT   |   Update On 2020-02-18 17:24 GMT
தர்மபுரியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கள்ளத்தனமாக மதுவிற்ற 2 பேரை கைது செய்தனர்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின்பேரில், தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் கள்ளத்தனமாக மது விற்பவர்களை கைது செய்ய ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது கோட்டப்பட்டி போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் மற்றும் தெய்வம் ஆகிய 2 பேரையும் அரசுக்குப் புறம்பாக மது விற்றதன் பேரில் கைது செய்தனர். 

மேலும் இவர்களிடம் இருந்து 21 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News