செய்திகள்
தற்கொலை

அத்தை மகன் இறந்த துக்கத்தில் கோழிப்பண்ணை அதிபர் தற்கொலை

Published On 2020-02-18 10:35 GMT   |   Update On 2020-02-18 10:35 GMT
கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் அத்தை மகன் இறந்த துக்கத்தில் கோழிப்பண்ணை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அன்பு நகரை சேர்ந்தவர் மோகன் பிரபு (23). கோழிப்பண்ணை நடத்தி வந்தார்.

இவரது அத்தை மகன் சந்திப் (23). இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வார்கள். மேலும் நண்பர்களாகவும் பழகி வந்தனர். கடந்த 2 மாதத்திற்கு முன்பு சந்திப் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனால் மோகன் பிரபு சோகத்தில் இருந்தார். நண்பனாக இருந்த அத்தை மகன் இறந்த மனவேதனையில் இருந்த மோகன் பிரபு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை ஆலாந்துறை விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேஷ் பிரபு. இவரது மனைவி பூங்கொடி(36). இவர் இன்று காலை வீட்டில் சாணி பவுடர் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பூங்கொடியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News