செய்திகள்
கோப்பு படம்

இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வாலிபர் கைது

Published On 2020-02-18 09:49 GMT   |   Update On 2020-02-18 09:49 GMT
கோவை அருகே சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிங்காநல்லூர்:

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் ஜிஷ்ணு (வயது 28). ஸ்டூடியோ ஒன்றில் போட்டோ கிராபராக உள்ளார். இவருக்கும் துடியலூரை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கும் முன்பு நட்பு ஏற்பட்டது.

தனக்கு பல சினிமா டைரக்டர்களை தெரியும் என்றும் பல இளம்பெண்களை சினிமாவில் சேர்த்துள்ளதாகவும் கூறினார். மேலும் நீ ரொம்ப அழகாக உள்ளார். உன்னையும் சினிமாவில் சேர்த்து விடுவதாக ஆசைவார்த்தை கூறினார்.

இதனை நம்பிய இளம்பெண் பலவிதமாக போஸ் கொடுத்தார். அதனை ஜிஷ்ணு போட்டோ எடுத்தார். மேலும் ஜிஷ்ணு இளம்பெண்ணிடம் நெருக்கமாக இருந்ததையும் படம் எடுத்துக்கொண்டார்.

ஒரு கட்டத்தில் ஆபாச படங்களை வெளியிடுவதாக இளம்பெண்ணை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்தார். ஜிஷ்ணுவின் மிரட்டலுக்கு பயந்த இளம்பெண் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்து வந்தார். நேற்று மாலை இளம்பெண்ணை தொடர்பு கொண்ட ஜிஷ்ணு தனக்கு உடனே ரூ.1½ லட்சம் பணம் வேண்டும். பணம் தரவில்லை என்றால் சினிமாவுக்காக எடுத்த படங்களை இணைதளம் மற்றும் உனது குடும்பத்தார் போனுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டினார். பணம் தன்னிடம் இல்லை என்று கூறினார். ஆனால் ஜிஷ்ணு தனக்கு பணம் தந்தே ஆகவேண்டும் என்று மிரட்டினார்.

இதனையடுத்து இளம்பெண் சிங்காநல்லூர் போலீசில் இது குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜிஷ்ணுவை கைது செய்தனர். ஆபாசமாக எடுத்த போட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது போன்று எத்தனை பெண்களை ஜிஷ்ணு போட்டோ எடுத்து பணம் பறித்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News