செய்திகள்
மாயம்

சாத்தான்குளத்தில் இளம்பெண் மாயம்- தந்தை புகார்

Published On 2020-02-17 17:07 GMT   |   Update On 2020-02-17 17:07 GMT
சாத்தான்குளத்தில் இளம்பெண் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் முஸ்லீம் மேல தெருவை சேர்ந்தவர் ஹமீது. இவரது மகள் ஷிபானா (வயது 23). இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் முறைப்படி பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதையடுத்து ஷிபானா அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூங்க சென்றவரை இன்று காலையில் பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது ஷிபானாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என பல்வேறு பகுதியில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே இது குறித்து ஹமீது சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஷிபானாவை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News