செய்திகள்
மாயம்

காவேரிப்பட்டணத்தில் பெண் மாயம்

Published On 2020-02-17 14:46 GMT   |   Update On 2020-02-17 14:46 GMT
காவேரிப்பட்டணத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற தாய் வீடு திரும்பாதது குறித்து அவரது மகன் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் காசி. இவரது மனைவி கீதா (வயது 54). இவர் கடந்த மாதம் 18-ம்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. 

பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இவரது மகன் சரவணகிரிதரன் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News