செய்திகள்
கைது

சித்தன்குடியில் தென்னந்தோப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

Published On 2020-02-17 14:31 GMT   |   Update On 2020-02-17 14:31 GMT
சித்தன்குடியில் தென்னந்தோப்பில் காசு வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்- பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி:

புதுவை சித்தன்குடியில் உள்ள  தென்னந்தோப்பில் ஒரு கும்பல் காசு வைத்து சூதாடுவதாக கோரிமேடு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் வெங்கட்டா-பாலன்நகரை சேர்ந்த விக்டர் (வயது51), முத்தியால்பேட்டை  அம்பலவாணன் நகரை சேர்ந்த  மணிகண்டன் (24). சாரம் தென்றல் நகரை சேர்ந்த ரிச்சர்டு (26), செல்லதுரை (30), ஜீவா நகரை சேர்ந்த சிவக்குமார் (43), சத்யராஜ் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து அவர்கள் 6 பேரையும்  போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள், சூதாட்ட பணம் 4,870 மற்றும்  2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 
Tags:    

Similar News