செய்திகள்
டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை - முதல்வர் பழனிச்சாமி உறுதி
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:
2019-ம் ஆண்டு நடபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4, குரூப்-2ஏ தேர்வுகளில் நடைபெற்ற மோசடிகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையின் போது 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் நடபெற்ற தேர்வுகளிலும் பலர் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முறைகேடுகள் தொடர்பாக இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் போது டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக எதிர்கட்சிகள் சார்பில் கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி:-
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடைபெற்ற இரண்டு மையங்களில் மட்டுமே முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், டி.என்.பி.எஸ்.சி ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். அதில் மாநில அரசு தலையிடுவதில்லை
இவ்வாறு அவர் கூறினார்