செய்திகள்
நீரில் மூழ்கி பலி

சாம்பவர் வடகரையில் குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2020-02-17 10:16 GMT   |   Update On 2020-02-17 10:16 GMT
சாம்பவர் வடகரையில் குளத்தில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாம்பவர் வடகரை:

சாம்பவர் வடகரை அருகே உள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் தாஸ். இவரது மகன் விஜய் (வயது26). இவர் ஐ.டி.ஐ. படித்து முடித்து விட்டு கூலி வேலை செய்து வந்தார். விஜய்க்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஊர் மேலழகியான் குளத்திற்கு குளிக்க சென்றார். அப்போது குளித்து கொண்டிருக்கும் போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் நீரில் மூழ்கி விஜய் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சாம்பவர் வடகரை போலீசார் விஜய்யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News