செய்திகள்
வீட்டுக்கு வரக்கூடாது என்று சொன்னதால் கள்ளக்காதலி வீட்டில் உயிரை மாய்த்த வாலிபர்
சூளகிரி அருகே வீட்டுக்கு வரக்கூடாது என்று சொன்னதால் கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே உள்ள குடிசாதன பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சீனிவாசன். இவரது மனைவி நிருபா (வயது 29). இவர்களுக்கு 6 வயது பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு சமாதான மாவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. தகராறு முற்றியதை அடுத்து சீனிவாசன் மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்து, வீட்டை விட்டு வெளியேறினார். சீனிவாசனின் வீட்டில் நிருபா தனது குழந்தையை பராமரித்து வளர்த்து வந்தார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பிரபாகர் (வயது 20) என்பவருடன் நிருபாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிவந்தனர். பிரபாகர் அடிக்கடி நிருபாவின் வீட்டிற்கு சென்றுவந்துள்ளார். நாளடையில் இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. சீனிவாசன் வீட்டில் நிருபா மற்றும் பிரபாகர் உல்லாசம் அனுபவித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு உல்லாசத்தை தவிர்க்குமாறு பிரபாகரை நிருபா வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தவிர்க்காமல் பிரபாகர் அடிக்கடி நிருபாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் மூன்று அறைகள் கொண்ட நிருபாவின் வீட்டில் பிரபாகர் இருந்தார். அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். நிருபாவை வீட்டின் உள் அறையில் வைத்து பூட்டினார். பின்னர் வீட்டில் உள்ள மற்றொரு அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பேரிகை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரபாகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பேரிகை போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே உள்ள குடிசாதன பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சீனிவாசன். இவரது மனைவி நிருபா (வயது 29). இவர்களுக்கு 6 வயது பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு சமாதான மாவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. தகராறு முற்றியதை அடுத்து சீனிவாசன் மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்து, வீட்டை விட்டு வெளியேறினார். சீனிவாசனின் வீட்டில் நிருபா தனது குழந்தையை பராமரித்து வளர்த்து வந்தார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பிரபாகர் (வயது 20) என்பவருடன் நிருபாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிவந்தனர். பிரபாகர் அடிக்கடி நிருபாவின் வீட்டிற்கு சென்றுவந்துள்ளார். நாளடையில் இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. சீனிவாசன் வீட்டில் நிருபா மற்றும் பிரபாகர் உல்லாசம் அனுபவித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு உல்லாசத்தை தவிர்க்குமாறு பிரபாகரை நிருபா வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தவிர்க்காமல் பிரபாகர் அடிக்கடி நிருபாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் மூன்று அறைகள் கொண்ட நிருபாவின் வீட்டில் பிரபாகர் இருந்தார். அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். நிருபாவை வீட்டின் உள் அறையில் வைத்து பூட்டினார். பின்னர் வீட்டில் உள்ள மற்றொரு அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பேரிகை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரபாகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பேரிகை போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.