செய்திகள்
தற்கொலை

சிறப்பு காவல்படை போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2020-02-15 18:05 GMT   |   Update On 2020-02-15 18:05 GMT
டெல்லி திகார் ஜெயிலில் பணியாற்றிய சிறப்பு காவல்படை போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்துள்ள தொண்டமாந்துறை ஊராட்சி, அய்யர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேல் மகன் ரமேஷ்(வயது 27). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ் காரராக பணிக்கு சேர்ந்தார். பின்னர் அவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் 8-வது பட்டாலியன் பிரிவின் கீழ் திகார் ஜெயிலில் பணியாற்றி வந்தார். மேலும் கடந்த 11-ந் தேதி ரமேஷ் விடுமுறையில் தனது சொந்த ஊரான அய்யர்பாளையம் கிராமத்திற்கு வந்தார். இந்த நிலையில் வீட்டில் அவருக்கு பெண் பார்ப்பது தொடர்பாக குடும்பத்தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த ரமேஷ் பருத்தி செடிக்கு அடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து வீட்டின் அருகே வாயில் நுரையுடன் பிணமாக கிடந்தார். இதனைகண்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவலறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவலர் ரமேஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என வழக்குப்பதிவு செய்து அரும்பாவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News