செய்திகள்
விபத்து

கல்லிடைக்குறிச்சி அருகே பைக் மீது வேன் மோதல்- விவசாயி பலி

Published On 2020-02-15 10:22 GMT   |   Update On 2020-02-15 10:22 GMT
கல்லிடைக்குறிச்சி அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் விவசாயி பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வேன் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டியை சேர்ந்தவர் சிவகாமி நாதன் (வயது49), விவசாயி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் கல்லிடைக்குறிச்சியில் இருந்து மணிமுத்தாறு செல்லும் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது எதிரே வந்த வேன் அவர் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் உடைந்து சம்பவ இடத்திலேயே சிவகாமிநாதன் ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வேன் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News